Thursday, April 9, 2020

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: ஊரடங்கு நீட்டிப்பு !!


anna -university-exams-postponed-april14-2020-hariharang-blogger-madurai

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்பதை உறுதிசெய்யவதாக இந்த அறிவிப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒததிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட இருந்த அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா: நோயின் நிலையை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு - முதல்வர்

அதாவது, ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கப்பட இருந்த பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஏப்ரல்-மே பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் மாற்றியமைப்படும் தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு: அரசுடன் கைகோர்த்த அண்ணா பல்கலைக் கழகம்!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


anna -university-exams-postponed-april14-2020-hariharang-blogger-madurai








No comments:

Post a Comment